Monday 31 January 2011

கலியுகம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கும்?

இம்மண்ணுலகின் முதல் நிலமான குமரிக் கண்டத்தில்தான் எல்லாப் பயிரினங்களும், உயிரினங்களும் காலப்போக்கில் தோன்றின. இத்தோற்றங்களில் முழுவளர்ச்சி ஏற்பட்டு இம்மண்ணின் ஈசர்களான (ஈசன் = தலைவன்) 'மணீசர்கள்' தோன்றிய பிறகே; அனைத்து வகையான வாழ்வியல்களுக்கும் நெறிமுறை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.




அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்கள் அடிக்கடி இம்மண்ணுலகுக்கு வந்து சென்றிட்டார்கள். அவர்கள், விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மணீசர்களைப் பண்பட்ட மனதை உடைய மனிதர்களாக மாற்றிடும் பணியில் ஈடுபட்டார்கள். அதன் பயனாகத் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நால்வகை வாழ்வியல்களை நெறிமுறைப் படுத்தும் 'சமூக விஞ்ஞானமாக'ப் பதினெண் சித்தர்களுடைய 'இந்துமதம்' இம்மண்ணுலகுக்கு அருட்கொடையாக வழங்கப்பட்டது.




இந்த 'இந்துமதம்' குமரிக் கண்டத்தின் தென் இமயமலையின் தென்கங்கை, தென்பிறம்மபுத்திரா, தென் இந்து, தென்யமுனை, பஃறுளி, குமரி, ... முதலிய வற்றாத பேராறுகள் வளப்படுத்திய நிலப்பகுதிகளில் செழிப்பாக முளைத்துக் கிளைத்து வளர்ந்தது. இப்படி, இந்த இந்துமதம் மிகப்பெரிய நிலப்பரப்பில் தன் போக்கில் வளர்ந்த காலம் 'அனாதிக்காலம்' எனக் குறிக்கப் படுகிறது. இந்த அனாதி காலத்தைப் பதினெண் சித்தர்கள் (4,85,920) நான்கு இலட்சத்து எண்பத்தையாயிரத்துத் தொள்ளாயிரத்து இருபது ஆண்டுகள் என்று குறிக்கிறார்கள்.




அனாதிக் காலத்தின் இறுதியில், இந்துமதத்துக்கென அரசாங்கத்தையும், இந்துமதத்துக்குரிய ஆட்சிமொழியான பதினெண் சித்தர்களின் தாய்மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியின் வளவளர்ச்சிக்கெனத் தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கும் திட்டம் செய்யப்பட்டது. அதன் பயனாகப் ப·றுளியாற்றங்கரையில் தொன்மதுரை உருவாயிற்று. அங்கு, பதினெண் சித்தர்க்ளின் தலைவரான 'சிவபெருமான்' தமிழின, மொழி, மதக் காப்பு அரசாக உருவாக்கப்பட்ட பாண்டிய அரசின் முதல் மன்னனாக முடிசூடினார். அவரே, தமிழ்ச் சங்கத்துக்கும் தலைவரானார்.




இச்சிவபெருமான், "பிறவாயாக்கைப் பெரியோன்" என்ற நிலைபெற்றவர். அதாவது, இவர், இம்மண்ணுலகில் மானுடர்க்காக எத்தனை முறை தோன்றினாலும்; மானுடக் கருவில் மீண்டும் பிறக்க மாட்டார். இவர், அறுபத்து நான்கு முறை திருவிளையாடல் நிகழ்த்தியபோதும், ஒருமுறை கூடப் பிறக்கவில்லை. எனவே, 'கருவூறார்' என்ற சொல்லால், அதாவது கருவில் ஊறமாட்டார் (மீண்டும் பிறக்க மாட்டார்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிட்டார். ஆனால், இந்துமதத்தில் மாயோன், நெடியோன், திருமால், பெருமால் என்று குறிக்கப்படும் காத்தற் கடவுள் பத்து முறை திருத்தோற்றம் (பிறப்பெடுத்தல் = அவதாரம்) செய்பவராக உள்ளார். இவர், 'கரு'வைத் தமது ஊராகக் கொண்டிட்டார். எனவே, இவர் 'கருவூரார்' என்றழைக்கப்படும் மரபைப் பெற்றிட்டார்.




சிவபெருமான் 'பிறவாயாக்கைப் பெரியோன்' என்பதால், அவர் 'ஞானாச்சாரியாராக', 'குவலய குருபீடமாக', இந்துமதத் தந்தையாக', 'தத்துவ நாயகமாக', 'அருளாட்சி நாயகமாக',... தமிழ் மொழியின் மெய்ஞ்ஞான சபைத் தலைவராகச் செயல்பட்டுப் பதினெண் சித்தர் பீடத்தைத் தோற்றுவித்தார். அப்பீடத்தில் தொடர்ந்து காலப் போக்கில் (48) நாற்பத்தெட்டுப் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றிய பிறகே, இம்மண்ணுலகு தனது நிறைவை எய்திடும் என்ற அருளுலக ஏற்பாட்டையும் செய்திட்டார். ஏனெனில், இம்மண்ணுலகும், இதனுடைய பயிரினங்களும், உயிரினங்களும், ஒன்பது கோள்கள் + பன்னிரண்டு இராசிகள் + இருபத்தேழு விண்மீன்கள் = (9 + 12 + 27 = 48) என்ற நாற்பத்தெட்டு ஆற்றல்களாலேயே இயக்கப் படுகின்றன.




சிவபெருமான் பாண்டிய அரசின் மன்னனாக முடிசூடிப் பதினெண் சித்தர்களுடைய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தை அரசாங்கத்தின் சட்டப் பூர்வமான மதமாக அறிவித்த நாள் முதல், 'இந்து மத ஆண்டு' என்ற காலக் கணக்கீடு தோற்றுவிக்கப்பட்டுப் பதினெண் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகைச் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகை வழிபடு நிலையினர்களாலும் தொடர்ந்து கணக்கிடப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த மூன்று உகங்களின் (யுகங்களின்) கணக்கும், இந்த நான்காவது உகம் எவ்வளவு காலம் இருந்திடப் போகிறது என்ற கணக்கும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.




1. கீரன் உகம் (கிரேதாயுகம்) 17,28,080 ஆண்டுகள்

2. தீரன் உகம் (திரேதாயுகம்) 12,96,000 ஆண்டுகள்

3. தூரன் உகம் (துவாபரயுகம்) 8,64,000 ஆண்டுகள்

4. கலியன் உகம் (கலியுகம்) 4,32,000 ஆண்டுகள்




(இந்த 1982இல் கலியன் உகம் 5,093 ஆண்டுகள் ஆகியுள்ளன. எனவே,

4,32,000 - 5,093 = 4,26,907 ஆண்டுகள் இன்னும் இக்கலியுகம் நீடித்திடும்.)


இப்படி மிகத் தெளிவாக இம்மண்ணுலகின் பயிரின உயிரின வாழ்வியல் ஆண்டுக் கணக்கு இந்து மதத்தில் இருக்கிறது.


நன்றி நன்றி நன்றி
சந்நிதானம் மதுரை.

1 comment:

  1. தஞ்சை பெரிய கோயிலை கட்டிய சித்தர் கருவூறார் அருளிய சத்தி
    காயந்திரி மந்தரத்திற்கு முதன் முதலாக இசை அமைக்கப்பட்டுள்ளது
    சித்தர் அடியார்கள் சோழ தேச வரலாற்று அன்பர்கள் வாங்கி பயனடையவும்
    தொடர்புக்கு: M G பாலா 9345342424

    ReplyDelete