Monday 19 December 2011

சனிஷ்வரரின் அதீத அருள் பெருக!!!

சனிஷ்வரரின் அதீத அருள் பெருக!!!



திருக்கொள்ளிக்காடு! - திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் உள்ள திருநெல்லிக்காவிலிருந்து தெங்கூர், கீராலத்தூர் வழியாக இத்தலத்தை அடையலாம். சனி பகவானின் தோஷம் நீக்கும் தலங்கள் வரிசையில் இது தலையாயது.

சுவாமிபெயர் - அக்கினீசுவரர், தேவியார் - பஞ்சினுமெல்லடியம்மை.

இத்திருக்கோயிலை வலம் வந்து சனி பகவானை வழிபட்டுத் திருக்கொள்ளி அக்னீஸ்வரர் திருமுன்பு வீழ்ந்து வணங்குபவர்களின் சனி தோஷத்தைத் தன் ஜோதியால் எரித்துச் சாம்பலாக மாற்றுபவன் அவ்விறைவன் என்பதைத் தொன்மை நூல்கள் கூறுகின்றன.




1,500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இத்திருக்கோயிலை மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் கற்கோயிலாகப் புதுப்பித்தான். இக்கோயிலில் இராஜராஜ சோழனின் கல்வெட்டுகள், முதலாம் இராஜேந்திர சோழனின் கல்வெட்டு, அவனது மகன் முதல் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள், பிற சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் உள்ளன.

மேலும் அறிய
http://www.livingextra.com/2011/07/blog-post_28.html

தல வரலாறு

செய்த தவறுக்காக முற்றிலும் பலம் இழந்த சனி பகவான் , பின்பு மனம் வருந்தி, வசிட்ட முனிவரின் யோசனைப்படி அக்கின்வனம் எனும் இத்தலத்தில் கடுமையான தவமியற்ற ஈசன் மனமிரங்கி அக்னி உருவில் தரிசனம் தந்து சனி பகவானை பொங்கு சனியாக மறு அவதாரம் எடுக்கச் செய்ததுடன் இத்தலத்திற்கு வந்து தம்மையும் சனீஸ்வரரையும் வழிபடுவோர்க்கு சனிக்கிரகம் தொடர்பான எல்லா துர்பலன்களும் விலகும் என அருளினார். பொங்கு சனியாக அவதாரம் எடுத்து குபேர மூலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

நன்றி லிவிங் எக்ஸ்ட்ரா தளம்

Saturday 10 December 2011

பஞ்ச பூதங்கள்

நிலம் நீர் அக்னி காற்று வானம் இதுதானே பஞ்ச பூதங்கள் இதில் நாம் அனுபவிப்பது எத்தனை? நான்கை மட்டும்தான், நிலம் நீர் அக்னி காற்று.

இதில் வானம் என்பது என்ன? கொஞ்சம் யோசித்து பாருங்கள்?

ஆனால் இந்த பஞ்ச பூதங்களில் பெருமை வாழ்ந்தது வானம்... ஆனால் அதை அடைவது எளிதாக்குவது அக்னி. அக்னியை பொறுத்தவரையில் அது அக்னியாக இருக்கும்வரையில் அதை ஒன்றும் செய்ய முடியாது அதுதான் அக்னியின் சிறப்பே. அதுதான் சிவனின் மகிமையே... அந்த அக்னி சொரூபன் தான் அண்ணாமலையான் உண்ணாமலை உடனுரையான்



உருவமிள்ள ஒன்றுதான் வானம் நம் கண்ணின் பார்வைத்திறன் அப்பால் உள்ள பகுதி நீலமாக தெரியும் அதுதான் வானம்..... அதுதான் கடவுள்.

ஆனால் அதை அறிந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள்தான் சித்தர்கள் முனிவர்கள் ரிசிகள்... நாமெல்லாம் எங்கே?

மனிதனின் கையில் பட்ட அத்தனையுமே அவனுக்கு சொந்தமாக உள்ளது... அவன் சொன்னபடி அடிமை பட்டு அவன் செயலுக்கு ஏற்ப ஆடிகொண்டுள்ளது சரிதானே?

ஆனால் மனிதனின் கையில் அகப்படாத காற்றும் வானமும் அதனுடைய போக்கில் உள்ளது... அதை அடைவதும் அதை அறிவதும் தான் மனித பிறப்பின் நோக்கம் என்பது என் கருத்து.. காற்று அடக்கி அதாவது மூச்சை அடக்கி ஆள கற்றுகொண்டாலே ஒருவன் பாதி முக்தி அடைந்து விடுகிறான் அதன் பின் வெட்ட வெளி என்கிற அந்த பரப்பிரமத்தை அடைவது எளிதாகிறது....

அதை அடைபவர்கள் எத்தனை பேர்? அதற்குத்தான் அனைவரும் போராடுகிறோம். அதற்குத்தான் இறைவனின் அருள் தேவை அதனாலதான் அவனருளால் அவனை வணங்குகிறோம்....

அவன் அருளால் அவனை அடைதல் மகிழ்ச்சிதானே....

எல்லாம் அவன் செயல்.... அந்த அண்ணாமலையானின் திருநாளில் எழுத தோணியதை இங்கு எழுதிவிட்டேன்......

கார்த்திகை திருநாளில் அனைவரும் ஈசனின் அருளை பெற்று அனைவரும் அனைத்தையும் அடைய என் பரம்பொருள் தாழ் வணங்குகிறேன்

Sunday 20 November 2011

உஜ்ஜையினி மாகாளி (கட் காளிகா)

உஜ்ஜையினி மாகாளி (கட் காளிகா)

Saturday 29 October 2011

ஸ்ரீ முருகன் மூல மந்திரம்

எல்லாரும் கந்த குரு கவசம் கேட்டு இருப்பிர்கள் மிண்டும் ஒரு முறை கேளுங்கள் ஏனென்றால் நானும் பல முறை கேட்டிருந்தாலும் அந்த கந்த குரு கவசத்தின் நோக்கமே கந்தனின் மூல மந்திரத்தை சொல்வதுதான் என்பது சில தினகளுக்கு முன்புதான் தெரிந்தது.

இதோ உங்களுக்காக



முருகன் மூல மந்திரம்:
ஓம் சௌம் சரவணபவ
ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ.




என்று ஓதி முருகனருள் பெருக.
மேலும் இம்மந்திரத்தின் பெருமையை அறிய பொறுமையாக கந்த குரு கவசத்தை கேளுங்கள்


அன்புடன்
சிவனருள் பதிவன்

Friday 8 July 2011

இடைக்காட்டு சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம்.

இடைக்காட்டு சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம்.



இவரின் ஜீவ சமாதி திருவண்ணாமலையில் உள்ளது என்றுதான் பல இணையதளங்களில் படித்திருந்தேன். அன்றுமுதல் குறிப்பாக அவரின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தேடிகொண்டிருந்தேன் தெரிந்தவரிகளிடமும் கேட்டேன் அப்போது தெரியவில்லை. ஆனால் அவரின் ஜீவ சமாதியை கண்டபின் அடடா அண்ணாமலையாரின் அதிசயம்தான் என்ன என்று வியந்தேன். ஆமாம் விடை தேடி அலைபவர்களுக்கு கண்டிப்பாக விடை கிடைக்கும் என்று என் பல தலைப்புகளில் சொல்லி இருப்பேன் அது போல் எனக்கும் விடை கிடைத்தது.

பட்டினத்தாரின் சிவ சமாதியை தரிசித்ததும் அடுத்து நான் சென்ற ஆலயம் திருவண்ணாமலைதான் அவரின் அருளால் அவரின் தரிசனத்தை ஆனந்தமாக கண்டேன். அம்மனையும் தரிசித்துவிட்டு அனைவரும் அமர்ந்து பேசிகொண்டிருந்தோம் அம்மன் சந்நிதானம் அருகில் உள்ள நவரகிரங்கங்க்களை வலம் வந்து முடிந்தவுடன்.

அப்போது நான் திடிரென்று என்னுடன் அமர்ந்து பேசிகொன்டிருந்தவரிடம் கேள்வி கேட்டேன். அயா இங்கே இடைகாட்டு சித்தரின் ஜீவ சமாதி உள்ளதாமே அது எங்கே என்று. எப்படி இந்த கேள்வி அப்போது கேட்டேன் என்று இன்றும் யூசித்துகொன்டுதான் உள்ளேன்.

அவர் அடடா உனக்கு தெரியாதா, எனக்கும் தெரியாமல்தான் இருந்தது. பல நாட்களாக எனக்கும் இந்த ஐயம் உண்டு, அதை எனக்கு நீகியவரே நான் கொஞ்ச நீரம் முன் உனக்கு காண்பித்த அந்த சாமியார்தான் என்று சொன்னார்.

அப்புறம் இடைக்காடு சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடத்திற்கு ஒரு நிமிடத்தில் அழைத்து சென்றார் என்றால் அது மிகையாகாது.

ஆமாம், அண்ணாமலையாரை தரிசித்து விட்டு அவரின் பிரகாரத்தை சுற்றிவிட்டு வெளியே வந்து அவரின் அடுத்த பிரகாரத்தை சுற்றி வரும்போது சரியாக அண்ணாமலையாரின் சன்னதி உள்ளத்துக்கு பின்புறம் அருணை யோகிஸ்வரர் மண்டபம் என்று இருக்கும். அது மண்டபம் அல்ல அதுதான் அதுதான் இடைக்காட்டு சித்தரின் ஜீவ சமாதி. அந்த மண்டபத்துக்கு கீழே விளக்கு எரியும் அங்கு பார்த்திர்களானால் இடைக்கட்டு சித்தரின் உருவம் சிலையாக வடிக்கப்பட்டிருக்கும்

எத்தனைமுறை அந்த பக்கம் வலம் வந்து இருந்தாலும் நான் தேடிக்கொண்டிருந்த அந்த மகானின் ஜீவ சமாதி அங்கு இருப்பதை கண்டவுடன் மெய் சிலிர்த்தேன். இதில் பல அர்த்தங்கள் எனக்கு புரிந்தது.

எல்லாம் சிவன் லீலை.

Monday 27 June 2011

பட்டினத்தாரின் ஜீவ சமாதி உள்ள இடம்

பட்டினத்தாரின் ஜீவ சமாதி உள்ள இடம்



திருவொற்றியூர் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆதிபுரிஸ்வரர் உடனுறை வடிவுடை அம்மன் ஆலயத்தை முதலில் தரிசனம் செய்யுங்கள். அந்த கோயிலுக்கு தியாகராஜா ஆலயம் என்று கூறுகின்றனர். அந்த அலாயத்தில் இருந்து சுமார் பத்து நிமிடம் நடை பயணமாக சென்று பட்டினத்தாரின் ஜீவ சமாதியை அடையலாம். அங்கே யாரிடமும் கேட்டு தெரிந்துகொள்ளலாம். படினத்தார் சமாதி என்று கேட்டால் தான் சரியான வழியை சொல்கிறார்கள். சித்தர் சமாதி என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆகவே பட்டனத்தாரின் ஜீவ சமாதி உள்ள இடம் என்று கேட்டால் அவரின் சிவ சமாதியை எளிதில் அடையலாம். அங்கிருந்து ஆட்டோக்களும் செல்கிறது. ஆட்டோவில் சென்றால் ஐந்து நிமிடம் ஆகும்.

உண்மையிலேயே அவரின் ஜீவ சமாதி உள்ள இடத்தில் அவரின் ஜீவன் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது. அவரின் ஜீவ சமாதி தரிசனம் உண்மையிலேயே நிதர்சனம்

காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே

அடுத்து இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி
சிவனருள் பதிவன்

Monday 6 June 2011

அட்சய திரிதியை அன்று தங்கம் தான் வாங்க வேண்டுமா?

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று மக்கள் சொல்லலாம். ஆனால், இறை அடியார்களாகிய நீங்கள் என்ன சொல்கிறீர்கள். ஆதியில் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த அற்புதமான வேத வாக்கியங்கள், பழமொழிகள் எல்லாம் தற்காலத்தில் அனர்த்தம் ஆகி விட்டதற்கு அட்சய திரிதியையும் ஒன்று.

அட்சய திரிதியை என்றால் என்ன?

ஆதிகாலத்தில் பிரம்ம தேவருக்கு ஐந்து தலைகள் இருந்தன. ஒரு முறை பிரம்ம மூர்த்தி தானே படைப்புக் கடவுள், தன்னை மிஞ்சிய தெய்வம் உலகில் எவரும் இல்லை என்று செருக்குக் கொண்டபோது சிவபெருமாள் பிரமனுடைய ஐந்தாவது தலையைக் கிள்ளி பிரம்மனுடைய அகங்காரத்தைச் சம்ஹாரம் செய்தார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தின் விளைவாக பிரம்மாவினுடைய கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது. இந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறுவதற்காக பிரபஞ்சம் எங்கும் அலைந்து திரிந்து பிட்சை ஏற்று, இறுதியில் காசி அன்னபூரணி தேவியிடம் பிச்சை ஏற்றபோது சிவபெருமானுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கி பிரம்ம கபாலம் அவர் கையிலிருந்து மறைந்தது. அன்னை பராசக்தியிடம் சிவபெருமாள் பிச்சை ஏற்ற தினமே அட்சய திரிதியை ஆகும்.

சிவபெருமானே அன்னபூரணி தேவியிடம் பிச்சை ஏற்கிறார் என்றால் அட்சய திரிதியை அன்று நாம் செய்ய வேண்டியது அன்னதானம் என்பது ஒரு சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளும் அல்லவா? ஆறறிவு பெற்ற மக்கள் இந்தச் சிறு விஷயத்தைக் கூட எப்படித் தலைகீழாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பது வியப்புக்குரியதே. திதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு. இதில் திரிதியை திதி எதையும் பெருக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. எது பெருக வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நன்றி சில இணையதளம் தொகுப்பு.

Sunday 1 May 2011

காசி மாநகரம் விஸ்வநாதரின் தரிசனம்

காசி மாநகரம் விஸ்வநாதரின் தரிசனம்

பல திரைப்படங்களிலும் பல செயிதிதாளகளிலும் சொல்லும் அளவிற்கு காசி நகரம் ஒன்றும் பயங்கரமான நகரம் அல்ல. மிகவும் சாந்தமான நகரம் எனக்கு எந்த வித குறையும் இல்லாமல் குறையும் இல்லாம நிறைந்த தரிசனம் தந்து எனக்கு பிரிய விடை தந்து அனுப்பினர் காசி விழ்வனாதர். இரண்டுன் நாட்கள் ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த நினைவை ஏற்படுத்தியது காசி நாதரின் அருள் கடாட்சம்.

கங்கை நதி பூஜை அருமை ஆனந்தம் ஒரு புறம் அரிச்ச்சன்ற மாயானம் மறுபுறம் சிவனின் மயானம் இரண்டுக்கும் நடுவில் கங்கையின் ஆரத்தி அதாவது கங்கையின் தீபராதை தினமும் மாலை 7 மணிக்கு



மிகசிறந்த பயணமாக இதை உணர்கிறேன். கண்டிப்பாக மிண்டும் தரிசிப்பேன்,




எல்லாருக்கும் ஒரு குறிக்கோள் இருந்தாலும் எனக்கு இவரை மிண்டும் தரிச்சிப்பேன். என்ற எண்ணம் காசியை விட்டு பயனிக்கும்பூது தோன்றியது. அதுவும் அவனின் சித்தமே

எத்தனை சித்தர்கள் எத்தனை மகான்கள் வந்த இடம், ...........காசி மீண்டும் தொடர்வேன்

Sunday 27 March 2011

ஓம் நமசிவாய - யாரெல்லாம் கூறலாம்?

ஓம் நமசிவாய - யாரெல்லாம் கூறலாம்?

நல்ல மனமும் நல்ல குணமும் உள்ள யாரும் நம சிவாய மந்திரத்தை கூறலாம். இதற்கு எந்த வித கட்டுப்பாடும் கிடையாது.

தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு ஒரு 5 நிமிடம் அவன் முன் அமர்ந்து தூய நினைவோடு தூய அன்போடு அவன் முன் அவன் நாமத்தை சொன்னால் அவன் மனமும் உருகும் அவன் அருளும் கிடைக்கும்.

ஓம் நமசிவாய
சிவ நமசிவாய
சிவாய நம சிவ
சிவ சிவ நம சிவ
சிவாய நம சிவாய
.

அதன் பிறகு நீங்கள் இயல்பாக உங்கள் பணிகளை தொடரலாம்.

அனைத்தும் ஜயமே அனைத்தும் இன்பமே

சிவாய நம என சொல்வோர்க்கு அபாயம் ஒருபோதுமில்லை.

ஓம் நம சிவாய





திருச்சிற்றம்பலம்

இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து.

Sunday 13 March 2011

விநாயகரின் திருநாமங்கள் 21

விநாயகரின் திருநாமங்கள் 21 உண்டு.



1.கணேசன்
2.ஏகதந்தன்
3.சிந்தாமணி
4.விநாயகன்
5.டுண்டிராஜன்
6.மயூரேசன்
7.லம்போதரன்
8.கஜானனன்
9.ஹேரம்பன்
10.வக்ரதுண்டன்
11.ஜேஷ்ட ராஜன்
12.நிஜஸ்திதி
13.ஆசாபூரன்
14.வரதன்
15.விகடராஜன்
16.தரணிதரன்
17.சித்திபுத்திபதி
18.பிரம்மணஸ்தபதி
19.மாங்கல்யேசர்
20.சர்வ பூஜ்யர்
21.விக்னராஜன் ஆகியன ஆகும்.

நன்றி ஒர்டுப்ராஸ் தளம்

Friday 11 March 2011

காசியின் தண்டல் நாயகன் தண்டபாணி

இணையத்தில் தேடியதில் கிடைத்தது. இந்த தகவல் காசிக்கு செல்லும் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் தருகிறேன். அனைவரும் அறிக தண்டபாணியின் தரிசனம் பெருக.

காசியின் தண்டல் நாயகன் தண்டபாணி


இவரை பற்றிய இன்னொரு கருத்தும் கதையும் இதோ,
நன்றி ஞானம் டாட் நெட் இணையதளம்


காசிக்குப்போயும் பாவம் தொலையலியே !
காசிக்குப் போனால் பாவம் தொலையும் என்பார்கள். காசியிலேயே பாவம் செய்பவர்கள் இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் தண்டபாணி பைரவர்.

காசியில் இரண்டு பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று காலபைரவர் கோயில், இது
மிகவும் பிரசித்தி பெற்றது. ஆனால், இதன் அருகிலுள்ள "தண்டபாணி மந்திரில்' உள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம்பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார்.

இவரைத் தெரிந்து கொள்வோமா!

குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். இவர்களில் குணபத்திரன் என்பவர் கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தார். இவர் தவமிருந்து பெற்ற பிள்ளை ஹரிகேசவன். இவர் சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். குணபத்திரன், தன் மகனை தங்கள் குல தலைவரான குபேரனை வழிபடும் படி தூண்டினார்.
""ஆஹா! குபேரனா நம் தலைவர்! அவர் சிவபெருமானிடம் இருந்து சகலநிதிகளையும் பெற்று உலகத்திற்கே பொருள் தருபவராயிற்றே! அவரது தயவிருந்தால், அவரே என்னை சிவபெருமானிடம் சேர்த்து விடுவாரே!'' என்று அப்போதும் சிவபெருமானின் பெருமைகளையே பேசினார்.

ஒருநாள், சிவனைக் காண வேண்டும் என்ற உந்துதல் அதிகமானது. அவர் காசியில் வசிக்கிறார் என்பதால், அங்கே செல்ல விரும்பினார் ஹரிகேசவன். வீட்டை விட்டு வெளியேறி வெகுதூரம் சென்று, சிவபெருமானை நினைத்து தவத்தை தொடங்கி விட்டார். உணவு. உறக்கம் மறந்து தியானத்தில் ஆழ்ந்ததால், எலும்பும் தோலுமாகி விட்டார். இத்தகைய பக்தனுக்கு அருள்புரிய வந்தார் சிவபெருமான். ஆழ்ந்த தியானத்தில் இருந்த தன் பக்தனை எழுப்பினார்.

ஹரிகேசவனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் முன்னால் ஒரு பெரிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
பக்தர்கள் "ஹரஹர சங்கர, சிவசிவ சங்கர' என்ற கோஷம் எழுப்பியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது ரிஷப வாகனத்தில் சிவன் காட்சியளித்தார். ""ஹரிகேசவா! நீ விரும்பியபடியே காசிக்கு வந்துவிட்டாய். உன் தவத்தை மெச்சினேன். உன் விருப்பப்படி இனி காசியிலேயே தங்கியிரு. இவ்வூரே எனக்கும் மிகவும் பிடித்தமானது. உனக்கு ஒரு பணி தருவேன், அதைச் செய்ய வேண்டும்,'' என்றார்.
தலையை மட்டும் அசைத்து பதிலேதும் சொல்லாமல், கைகட்டி வாய் பொத்தி நின்ற கேசவனிடம்,""இந்த ஊருக்குள் யார் நுழைந்தாலும் அவர்களைக் கண்காணிக்க வேண்டும். இங்குள்ள எல்லாக் கணங்களுக்கும் (காவல் பூதங்கள்) நீயே தலைவன்.

நீயே இங்கு வருவோருக்கு உணவும், நீண்ட ஆயுளும் தர வேண்டும். இவ்வுலக வாழ்வு பொய்யானது என்ற ஞானத்தையும் அருளவேண்டும். இனி இந்த காசியின் அதிகாரி நீ தான். இங்கே வருபவர்கள் பாவ சிந்தனையுடன் திரிந்தால், அவர்களை இந்த ஊரை விட்டு வெளியே செல்லும்படியான மனநிலையை உருவாக்க வேண்டும்.

இங்கே நல்லவர்கள் மட்டுமே தங்க வேண்டும். உன்னை மக்கள் "தண்டபைரவர்' என்பர். உனக்கு தேவ சரீரம் தருகிறேன்,'' என்றார்.

ஹரிகேசவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்போது உருவானது தான் "தண்டபாணி மந்திர்'. காசிக்குப் போனால், இந்தக் கோயிலுக்குச் சென்று பிறப்பற்ற நிலையை அடைய வேண்டி வாருங்கள்

Sunday 6 March 2011

ஸ்ரீ காளஹஸ்தி திருத்தல வரலாறு

ஸ்ரீ காளஹஸ்தி திருத்தலம்

ஸ்ரீ(சீ) - காளம் - அத்தி = சிலந்தி - பாம்பு - யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்.



இங்கு வந்த அகத்தியர் விநாயகரை வழிபடாமற் போகவே, பொன்முகலி ஆறு நீரின்றி வற்றியது; அகத்தியர் தம் தவறுணர்ந்து பாதாளத்தில் - ஆழத்தில் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்றார் என்பது தல வரலாற்றுச் செய்தி. (பாதாள விநாயகர் சந்நிதி உள்ளது.)


'திருமஞ்சனக் கோபுரம் ' எனப்படும் கோபுரத்திலிருந்து பார்த்தால், நேரே பொன்முகலி ஆறு தெரியும்; ஆற்றுக்குச் செல்வதற்கு படிக்கட்டுகள் உள்ளன. இவ்வழியேதான் திண்ணனார் (கண்ணப்பர்) பொன்முகலி நீரைக் கொண்டுவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.


சண்டேசுவரர் சந்நிதி - மூலவர் பாணம் மட்டும் ஒன்று மிக உயரமாக உள்ளது; முகலாயர் படையெடுப்பின்போது கோயிலில் உள்ள மூல விக்ரகங்களை உடைத்துச் செல்வங்களை அபகரித்து வந்தனர்; அவ்வாறு இங்கு நிகழாதபடி தடுக்கவே மூலவருக்கு முன்னால் இதைப் பிரதிஷ்டை செய்துவைத்து அவ்விடத்தை மூடிவிட, வந்தவர்கள் இதையே உண்மையான மூலவர் என்றெண்ணி, உடைத்துப்பார்த்து, ஒன்றும் கிடைக்காமையால் திரும்பிவிட, பின்பு சிலகாலம் கழித்து மூலவர் சந்நிதி திறக்கப்பட்டதாம். அப்போது முன் இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, படையெடுப்பாளர்களால் உடைக்கப்பட்ட பாணமே இது என்று சொல்லப்படுகிறது.






விரிவான ஆலய வரலாறை அறிய இந்த இணைய முகவரியை சொடுக்கி பதிவிறக்கம் செய்து கொள்ளவும் முடியாதவர்கள் தங்களின் ஈ மெயில் தரவும் அவர்களுக்கு தனிமடலில் அனுப்பி வைக்கிறேன்.


http://www.mediafire.com/?90bp2jy9q5358gb

Tuesday 1 March 2011

உங்களின் தேடல்தான் என்ன? - 3

நிண்ட இடைவேளைக்கு பிறகு இதை தொடர்கிறேன். நேரமின்மை மற்றும் வேலை பளு .

சரி இந்த சிவராத்திரியில் உங்கள் தேடல் நல்லவையாக இருக்கட்டும். இப்படி சொல்வதால் எனது செயல் நான் நல்லவனா என்பது எனக்கு தெரியாது., யாரும் காலத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. எல்லாம் அவன் அருளாலே என்று விட்டுவிடுங்கள் . ஆனால் அவனை உறுதியாக பிடித்துகொள்ளுங்கள் அது போதும்.

தேடி தேடி போகும் பொது அது விலகித்தான் செல்லும். அதுவும் இந்த கலிகாலத்தில் மிகவும் கடினம் அவனை அடைவது., அப்படி மீறி அவனை அடைபவர்கள் எப்பேர் பட்டவர்கள் என்று சொல்லித்தெரிவதில்லை.

எப்படி எப்படியோ இறைய தேடுபவர்களில் இப்படியும் அடையலாம் என்று ஒரு குறிக்கோளே இல்லாமல் தேட்டுபவர்களில் நானும் ஒருவன். பக்கத்திலேயே இருப்பான் ஆனால் இருக்கமாட்டான் அவன்தான் இறைவன்,.



ஆனால் எப்போதும் அவன் நம்மை வழி நடத்துவான் என்று உறுதியாக நினைத்து இந்த சிவராத்தியில் முடிந்த வரை கண் விழித்து அவனை போற்றி புகழ்ந்து தொழுது அவன் அருளை அடைய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை சொல்லிகொள்கிறேன்.

சிவமே என்று தொழுவோர்க்கு
அகமே சிவம்


எனும் தத்துவத்தை எளிதில் புரியவைப்பான் அவன்.
அனைவருக்கும் எனது சிவராத்திரி வாழ்த்துகள்

சிவ சிவ

எனும் மந்திரத்தை சிரமேற்கொண்டு இந்த சிவராத்திரியை அழகாக அமைத்திடுங்கள்

Saturday 26 February 2011

மகாசிவராத்திரி உங்கள் வீட்டில் எழிலோடு எழில் கூட்ட.

மகா சிவராத்திரி பற்றி அனைவரும் அறிந்ததே. இந்த மகாசிவராத்திரியில் உங்களுக்காக நான் தருவது இந்த புகைப்படத்தைதான். முடிந்தவரையில் இந்த படத்தை நகலெடுத்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜித்து ஈசனின் அருளைபெருங்கள் என்பதே.



சிவம் எ‌ன்ற சொல்லுக்கு சுகம் எ‌ன்று பொருள் உள்ளது. உலகம் அழிந்தபோது மீண்டும் உலகை உருவாக்க பார்வதிதேவி சிவனை வழிபட்டு இரவு முழுவதும் இருந்த விரதமே "சிவராத்திரி விரதம்' எனப்படுகிறது. இந்த விரதத்தை முறைப்படி கடைபிடிக்க வேண்டும். சிவராத்திரி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் நன்மை பெருகும்.


நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என ஐந்து சிவராத்திரிகள் உள்ளன.

மகா சிவராத்திரி
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.
சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்? சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

Tuesday 8 February 2011

போகரின் ஜீவ சமாதி அமைந்துள்ள இடம்

முருகனின் ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தளமாக இன்றும் விளங்கி வருவது பழனி. பழனியில் பழனி ஆண்டவரின் சந்நிதியின் அருகிலேயே போகர் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

பழனி முருகனை தரிசனம் செய்துவிட்டு அவரது பிரகாரத்தை சுற்றி விட்டு வெளியே வரும்போது பிரசாதம் கொடுப்பார்கள். அந்த இடத்திற்கு அருகிலேயே போகரின் ஜீவ சமாதி இடம் அமைந்திருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இது தெரியாது. சிறிய குகை போல் இருக்கும் அதன் நுழைவாயில். முருகரின் பரம பக்தர் போகர் என்பது குறிபிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அனைவரும் அறிந்த பழனி மஊலவரின் அருகிலேயே இருக்கும் நவ பாசான சிலையை செய்தவரும் இவர்தான்.




போகரின் தரிசனம் பெருக முருகனருள் அடைக.

பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திருவாவினன்குடி ஆகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அருளி அவரை மகிவிக்கிறார் இந்த குழந்தை வெலாயூதர். இது முற்றிலும் உண்மை.

பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது

Monday 7 February 2011

பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம்

இராமேஸ்வரம் அதாவது 12 ஜோதிர்லிங்க தலங்களுள் ஒன்று. இந்த ஆலயத்தின் வரலாறு அனைவரும் அறிந்ததே.

இந்த ஆலயத்திற்குள்தான் இருக்கிறது பதஞ்சலி முனிவரின் அதாவது பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி.மூலவரை தரிசித்துவிட்டு அவரின் சன்னிதானத்தை கடந்து பர்வதவர்தினி அம்மனை தரிசித்து விட்டு சுற்றி வரும்போது அடுத்த பிரகாரத்தில் வலது பக்கத்தில் ஒரு சந்நிதி இருக்கும். அதற்குள் ருத்ராட்ச மாலைகள் நிறைந்திருக்கும் மிகவும் அமைதியான சூழல் இருக்கும். ருத்ராட்சத்தால் ஒரு சமாதி முழுதும் நிறைந்திருக்கும். அதுதான் பதஞ்சலி சித்தரின் ஜீவ சமாதி.




பலர் அந்த ஆலயத்தை தரிசித்திருப்பார்கள் ஆனால் அனைவரும் இவரை தரிசிதிருப்பர்களா என்பது ஐயமே. அனைவரும் இவர் இருக்கும் இடத்தை கடந்து வந்திருப்பிர்கள்.இனிமேல் இராமேஸ்வரம் செல்பவர்கள் இவரையும் தரிசனம் செய்வீர்கள் என்பதில் ஐயமில்லை.

அதே சந்நிதியில் 18 சித்தரிகளின் ஜீவ சமாதி இருக்கும் இடங்களை குறிப்பாக வைத்து பாடப்பெற்ற பாடல் இருக்கும்.

நன்றி

பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம்

பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ள இடம்

நாங்கள் இவரின் ஜீவ சமாதியை தரிசித்தது இவரின் கருணையே என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் நாங்கள் மாலை நேரத்தில் ஆலயம் திறக்கும் முன்னரே சென்று விட்டோம்.. சங்கரன்கோயில் ஆலயம் திறக்க நேரமாகும் என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்துகொண்டிருந்த வேலையில் அங்கே பூ விற்பவர்களிடல் கேட்டோம் இங்கு வேறு ஆலயம் உள்ளதா என்று? அவர்கள் மூலம் எங்களுக்கு வழிகாட்டியதே அந்த சங்கரந்தானே என்று என்னும்போது மனம் கொன்ட மகிழ்ச்சிகு எல்லை இல்லை.

சங்கரன் கோயில் ஆலயத்தின் மேற்கு கோபுர வாசல் வழியாக நடந்து சென்றால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இவரின் ஜீவ சமாதி. ஆட்டோவிலும் செல்லலாம்..ஆனால் ஆட்டோகாரரிடம் சித்தர் சமாதி என்று சொல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆலயத்தின் வாசலில் பூ பழம் விற்பவர்களிடம் வழி கேட்டாலும் சரியாக சொல்வார்கள்.



சங்கரன் கோவிலில் மேற்குக் கோபுர வாசல் அருகே புளியங்குடி செல்லும் சாலையில், பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி பீடம் அமைந்துள்ளது.




சங்கரன் கோயில் ஆலயத்தை அடைந்து சங்கரனாராயனரை தரிசனம் செய்யுங்கள். தரிசனம் முடிந்ததும் ஆலயத்தை விட்டு வெளியே வந்ததும் ஆலயத்தின் பின்புறமாக நடந்து செல்லுங்கள். ஒரு சாலை வரும் அந்த சாலையில் வலது புறமாக வலந்து சுமார் 1 கிலோ மிட்டார் தூரம் நடந்ததும் சாலையை ஒட்டி ஒரு குளம் இருக்கும் அதே இடத்தில் ஒரு தகவல்பலகையும் இருக்கும் அதுதான் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கும் இடம்.




சாலையில் இடது புறமாக அல்லது வலது புறமாக வலைவதில் குழப்பம் இருந்தால் அருகில் இருக்கும் சிலரிடம் விசாரித்து செல்லுங்கள்.

பாம்பாட்டி சித்தரின் தரிசனம் பெருக ஈசன் அருள் அடைக

மருத மலையிலும் அவரது ஜீவ சமாதி இருக்கிறது. சித்தர்கள் பல இடங்களில் ஜீவ சமாதி அடையும் திறன் படைத்தவர்கள்

Monday 31 January 2011

கலியுகம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கும்?

இம்மண்ணுலகின் முதல் நிலமான குமரிக் கண்டத்தில்தான் எல்லாப் பயிரினங்களும், உயிரினங்களும் காலப்போக்கில் தோன்றின. இத்தோற்றங்களில் முழுவளர்ச்சி ஏற்பட்டு இம்மண்ணின் ஈசர்களான (ஈசன் = தலைவன்) 'மணீசர்கள்' தோன்றிய பிறகே; அனைத்து வகையான வாழ்வியல்களுக்கும் நெறிமுறை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.




அண்டபேரண்டமாளும் பதினெண் சித்தர்கள் அடிக்கடி இம்மண்ணுலகுக்கு வந்து சென்றிட்டார்கள். அவர்கள், விலங்குகளோடு விலங்குகளாக வாழ்ந்த மணீசர்களைப் பண்பட்ட மனதை உடைய மனிதர்களாக மாற்றிடும் பணியில் ஈடுபட்டார்கள். அதன் பயனாகத் தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமுதாய வாழ்வு, அரசியல் வாழ்வு எனும் நால்வகை வாழ்வியல்களை நெறிமுறைப் படுத்தும் 'சமூக விஞ்ஞானமாக'ப் பதினெண் சித்தர்களுடைய 'இந்துமதம்' இம்மண்ணுலகுக்கு அருட்கொடையாக வழங்கப்பட்டது.




இந்த 'இந்துமதம்' குமரிக் கண்டத்தின் தென் இமயமலையின் தென்கங்கை, தென்பிறம்மபுத்திரா, தென் இந்து, தென்யமுனை, பஃறுளி, குமரி, ... முதலிய வற்றாத பேராறுகள் வளப்படுத்திய நிலப்பகுதிகளில் செழிப்பாக முளைத்துக் கிளைத்து வளர்ந்தது. இப்படி, இந்த இந்துமதம் மிகப்பெரிய நிலப்பரப்பில் தன் போக்கில் வளர்ந்த காலம் 'அனாதிக்காலம்' எனக் குறிக்கப் படுகிறது. இந்த அனாதி காலத்தைப் பதினெண் சித்தர்கள் (4,85,920) நான்கு இலட்சத்து எண்பத்தையாயிரத்துத் தொள்ளாயிரத்து இருபது ஆண்டுகள் என்று குறிக்கிறார்கள்.




அனாதிக் காலத்தின் இறுதியில், இந்துமதத்துக்கென அரசாங்கத்தையும், இந்துமதத்துக்குரிய ஆட்சிமொழியான பதினெண் சித்தர்களின் தாய்மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ் மொழியின் வளவளர்ச்சிக்கெனத் தமிழ்ச் சங்கத்தையும் உருவாக்கும் திட்டம் செய்யப்பட்டது. அதன் பயனாகப் ப·றுளியாற்றங்கரையில் தொன்மதுரை உருவாயிற்று. அங்கு, பதினெண் சித்தர்க்ளின் தலைவரான 'சிவபெருமான்' தமிழின, மொழி, மதக் காப்பு அரசாக உருவாக்கப்பட்ட பாண்டிய அரசின் முதல் மன்னனாக முடிசூடினார். அவரே, தமிழ்ச் சங்கத்துக்கும் தலைவரானார்.




இச்சிவபெருமான், "பிறவாயாக்கைப் பெரியோன்" என்ற நிலைபெற்றவர். அதாவது, இவர், இம்மண்ணுலகில் மானுடர்க்காக எத்தனை முறை தோன்றினாலும்; மானுடக் கருவில் மீண்டும் பிறக்க மாட்டார். இவர், அறுபத்து நான்கு முறை திருவிளையாடல் நிகழ்த்தியபோதும், ஒருமுறை கூடப் பிறக்கவில்லை. எனவே, 'கருவூறார்' என்ற சொல்லால், அதாவது கருவில் ஊறமாட்டார் (மீண்டும் பிறக்க மாட்டார்) என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிட்டார். ஆனால், இந்துமதத்தில் மாயோன், நெடியோன், திருமால், பெருமால் என்று குறிக்கப்படும் காத்தற் கடவுள் பத்து முறை திருத்தோற்றம் (பிறப்பெடுத்தல் = அவதாரம்) செய்பவராக உள்ளார். இவர், 'கரு'வைத் தமது ஊராகக் கொண்டிட்டார். எனவே, இவர் 'கருவூரார்' என்றழைக்கப்படும் மரபைப் பெற்றிட்டார்.




சிவபெருமான் 'பிறவாயாக்கைப் பெரியோன்' என்பதால், அவர் 'ஞானாச்சாரியாராக', 'குவலய குருபீடமாக', இந்துமதத் தந்தையாக', 'தத்துவ நாயகமாக', 'அருளாட்சி நாயகமாக',... தமிழ் மொழியின் மெய்ஞ்ஞான சபைத் தலைவராகச் செயல்பட்டுப் பதினெண் சித்தர் பீடத்தைத் தோற்றுவித்தார். அப்பீடத்தில் தொடர்ந்து காலப் போக்கில் (48) நாற்பத்தெட்டுப் பதினெண் சித்தர் பீடாதிபதிகள் தோன்றிய பிறகே, இம்மண்ணுலகு தனது நிறைவை எய்திடும் என்ற அருளுலக ஏற்பாட்டையும் செய்திட்டார். ஏனெனில், இம்மண்ணுலகும், இதனுடைய பயிரினங்களும், உயிரினங்களும், ஒன்பது கோள்கள் + பன்னிரண்டு இராசிகள் + இருபத்தேழு விண்மீன்கள் = (9 + 12 + 27 = 48) என்ற நாற்பத்தெட்டு ஆற்றல்களாலேயே இயக்கப் படுகின்றன.




சிவபெருமான் பாண்டிய அரசின் மன்னனாக முடிசூடிப் பதினெண் சித்தர்களுடைய அண்டபேரண்டமாளும் இந்து மதத்தை அரசாங்கத்தின் சட்டப் பூர்வமான மதமாக அறிவித்த நாள் முதல், 'இந்து மத ஆண்டு' என்ற காலக் கணக்கீடு தோற்றுவிக்கப்பட்டுப் பதினெண் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகைச் சித்தர்களாலும், நாற்பத்தெட்டுவகை வழிபடு நிலையினர்களாலும் தொடர்ந்து கணக்கிடப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த மூன்று உகங்களின் (யுகங்களின்) கணக்கும், இந்த நான்காவது உகம் எவ்வளவு காலம் இருந்திடப் போகிறது என்ற கணக்கும் மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.




1. கீரன் உகம் (கிரேதாயுகம்) 17,28,080 ஆண்டுகள்

2. தீரன் உகம் (திரேதாயுகம்) 12,96,000 ஆண்டுகள்

3. தூரன் உகம் (துவாபரயுகம்) 8,64,000 ஆண்டுகள்

4. கலியன் உகம் (கலியுகம்) 4,32,000 ஆண்டுகள்




(இந்த 1982இல் கலியன் உகம் 5,093 ஆண்டுகள் ஆகியுள்ளன. எனவே,

4,32,000 - 5,093 = 4,26,907 ஆண்டுகள் இன்னும் இக்கலியுகம் நீடித்திடும்.)


இப்படி மிகத் தெளிவாக இம்மண்ணுலகின் பயிரின உயிரின வாழ்வியல் ஆண்டுக் கணக்கு இந்து மதத்தில் இருக்கிறது.


நன்றி நன்றி நன்றி
சந்நிதானம் மதுரை.

உண்மைகள் பலபல அவற்றுள் சில ஆன்மிக துகள்கள்

1.மனிதர்களுக்கு முற்பிறவிகள், மறுபிறவிகள் உண்டு.

2.பிறவாமை, இறவாமை, காயகல்ப சித்திகள் பெற முடியும்

3.ஆவி, ஆன்மா, உயிர் என்ற மூன்று உண்டு.

4.(பசு) உயிர், (பதி) இறை, (பாசம்) தளை என்ற மூன்றே இந்து மதத்தின் அடிப்படை.

5.இம்மண்ணுலகின் இயக்கமும், இம்மண்ணுலகப் பயிரின உயிரின வாழ்வியல்களும் விண்ணிலுள்ள நாள்கள், கோள்கள், இராசிகள், மீன்கள் ... முதலியவற்றின் இயக்கப்படிதான் நிகழுகின்றன.

6.சூரியனிலிருந்து உடைந்து பிரிந்து வந்த நெருப்புக் கோளம்தான் படிப்படியாகப் பனிக்கோளமாக, நீர்க்கோளமாக இருந்து... கல்லும் மண்ணும் தோன்றிப் பின்னர் பயிரினங்களும் உயிரினங்களும் தோன்றி இன்றைய உலகாயிற்று.

7.உடல் தோன்றுவதற்கு முன்னரே உயிர்கள் தோன்றி உலவி வாழுகின்றன (அருவங்கள்). இவையே கருவறை புகுந்து உருவங்களாகின்றன. இதுவே அருவ நிலைகள், உருவ நிலைகள், அருவுருவ நிலைகள் எனப்படுகின்றன.

8.ஆணும், பெண்ணும் சமமே. ஆணை விடப் பெண் அருட்சத்தி பெறும் ஆற்றலையும், தரத்தையும், தீரத்தையும் மிகுதியாகவே பெற்றிருக்கிறாள். பெண்ணையே சத்தியாக வழிபடுவது தான் தந்தர, தாந்தர, தாந்தரீக, தந்திற, தாந்திறப் பூசை முறைகள். சத்தியே அனைத்துக்கும் மூலமானவள், மேலானவள், தலைமையானவள்.

9.பெண் திங்கள் தோறும் மலரும் மலர். அவளைத் தீட்டு என்றோ! விதவை என்றோ! விலக்கி வைப்பது விவேகமற்ற செயல்; தெய்வ விரோதச் செயல்.

10.இம்மண்ணுலகும், பயிரினங்களும், உயிரினங்களும் இயற்கையே. இவற்றின் வடிவிலும், வாழ்விலும் இறைமை அணுக்கள் ஊற்றெடுக்கின்றன. அவற்றைக் குருவழி அறிந்து செயல்படுபவர் திருநிலைகளைப் பெறலாம்.

11.வாழ்ந்த மனிதர்களே இறை, கடவுள், தெய்வம், ஆண்டவர், பட்டவர், தேவர், தேவியர், அமரர், வானவர், ... இருடி, முனிவர், கணபாடி என்று நாற்பத்தெட்டுத் திருநிலைகளைப் பெறுகின்றனர்.

12.ஒரே கடவுள் என்ற கருத்துத் தவறானது. உலகில் தோன்றும் அருளாளர் எல்லோருமே அவரவர் அநுபவத்துக்கேற்ப ஒரு கடவுளைப் பற்றிய உண்மையைக் கூறிச் சென்றுள்ளனர் என்பதால் கடவுள்கள் பலர் உண்டு என்ற பேருண்மை விளங்குகிறது.

13.எல்லா வழிபாட்டு நிலையங்களும், வழிபாட்டு முறைகளும், மறைகளும், நெறிகளும், வேதங்களும், நாதங்களும், போதங்களும், ஓதங்களும், சித்தங்களும், தவங்களும் ... மனிதரைத் தூய்மைப் படுத்தி உய்வு பெறச் செய்வனவே. அதனால் உலக ஆன்ம நேய ஒருமைப் பாட்டுக்கு உலகை அழைத்துச் செல்லுவது அனைத்துக்கும் மூலமான, முதலான, தாயான சித்தர் நெறியெனும் இந்து மதமே.

14.அனைவரும் எல்லா உரிமைகளையும் பெற்றுப் பெருமையோடு பண்பாடும், நாகரீகமும் பேணி வாழும் வாழ்வைப் பதினெண்சித்தர்கள் படைத்த இந்து மதமே செயலாக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றது.

15.மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதோ, சுரண்டுவதோ, ஏமாற்றுவதோ தவறு! தவறு!! தவறு!!!

16.மொழி, இனம், நாடு, மதம், சாதி ... என்பவை மானுட அமைதியையோ! நிறைவையோ! நிம்மதியையோ! ஒற்றுமையையோ! மகிழ்ச்சியையோ! பாதுகாப்பையோ! நலிவடையச் செய்துவிடக் கூடாது! கூடாது! கூடாது! கூடவே கூடாது!

17.சமத்துவச் சகோதரத்தத்துவப் பொதுவுடமைக் கூட்டுறவுச் சமுதாயம் அமைக்கப் பாடுபடுவதே பதினெண் சித்தர்களின் தத்துவ நோக்கமாகும்.

18.மனித வாழ்வுக்குரிய அன்பு, பாசம், பற்று, கனிவு, காதல், இனிமை, உறவு, (குடும்ப வாழ்வு) இல்லறம், கடமை, வீரம், நன்றி, கட்டுப்பாடு, ஒற்றுமை, நட்பு, சமாதானம் ... முதலிய மென்மைப் பண்புகளின் விதைப்பண்ணையே பதினெண் சித்தர்கள் படைத்த இந்து மதம். அதனால் தான் ‘இந்து மறுமலர்ச்சி பெற்ற போதுதான் பிற்காலச் சோழப் பேரரசு (785-1279) அருளாட்சி நிகழ்த்தப் பிறந்தது’ என்ற இப்பேருண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.


நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றி!!!! நன்றி!!!!!

குருமகா சன்னிதானம்

Friday 28 January 2011

நீங்கள் இப்படி நினைத்ததுண்டா?

உண்மையான ஒருவனுக்கு, கடவுள் தேடலும் குடும்ப பாரமும் இடையறாது தொந்தரவு கொடுத்துக் கொண்டேதான் இருக்கும்.

கடவுளை நோக்கி நகரும் போது குடும்பம் இழுக்கும்.

குடும்பத்தையே சுற்றி வரும்போது கடவுள் நினைப்பு இழுக்கும்.

நல்ல மனிதனின் இடையறாத போராட்டம் இது.

சரியான உறக்கத்தை கொடுக்காது, திடுக்கிட்டு எழ வைக்கும். உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது இது தான்!

இந்த இரண்டுக்குமான வேதனையில் நீங்கள் தவித்திருகிறிர்களா?

பிரியமான மனைவி, பிரியமான குழந்தைகள், நல்ல மாமனார் வீடு, சுகமான தாய்-தந்தை, ஆயினும் கடவுள் என்பது வேறு இடத்தில், வேறு எங்கோ இருப்பதாக நீங்கள் நினைத்திருகிறிர்களா?






கடவுளைத் தேடுபவர் வெளியே அலைய அலையத்தான் உள்ளுக்குள் போகமுடியும். வெளியே கடவுள் இல்லை, உள்ளே தன் உள்ளத்தில் இருக்கிறார் என்பதை, அலைந்துதான் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த கருத்தை நீங்கள் ஏற்றுகொல்கிறிர்களா?

Friday 14 January 2011

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்



இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்க என் இறைவனை வணங்கி பொங்கல் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன்.

Monday 10 January 2011

புதுப்பொலிவுடன் அருள் பாளிக்கும் தெய்வங்கள்.

புதுப்பொலிவுடன் அருள் பாளிக்கும் தெய்வங்கள்.

ஸ்ரீமரகதாம்பிகை உடனுறை ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர் ஆலயம் பொலிவுப்பெற்று கும்பாபிசேகம் கண்டு புதுப்பொலிவுடன் அருள்பாலிக்கும் தெய்வங்கள்.









Sunday 9 January 2011

மகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-4

கார்த்திகை மாதத்தில் கடைசி ஞாயிறு அன்று இரவு சிம்ம குள தீர்த்தத்தில் குளித்துவிட்டு கோயிலின் தாழ்வாரத்தில் படுத்து சிவனை மனதில் நினைத்து வேண்டுவார்கள். அப்போது இறைவன் இவர்களில் கனவில் வந்து குறை நிவர்த்தி செய்யும் வரையில் அப்படியே படுத்து இருப்பார்கள். அப்படி ஒரு விசேசம் இந்த மார்க்கபந்திஸ்வரர் ஆலயத்தில்.
அதற்காகத்தான் இவ்வளும் பெண்கலும் காத்திருக்கிறார்கள். இது ஒரு பகுதி போட்டோதான். சரியாக இரவு 12 மணிக்கு வருடத்திற்கு ஒரு முறைதான் இந்த தீர்த்தத்தை திறப்பார்கள்.

இந்த சிம்மகுளத்தில் ஆதி சங்கரர் ஸ்தாபித்த யந்திரம் இருப்பதாக ஸ்தல வரலாறு கூறுகிறது








Wednesday 5 January 2011

மகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-3

சிவபெருமான்
ஸ்ரீ மார்க்க பந்திஸ்வரர் வித்தியாசமாக அருள்பாலிக்கிறார். விசேசமாக கும்பாபிசேகத்திற்க்காக மட்டுமே அலங்கரிக்கப்பட்ட சிவன்.



மாவட்ட கலெக்டர் வேலூர் தங்க கோயில் நிர்வாகி நாராயணி ஆலய ஸ்தாபகர் சக்தி அம்மா மற்றும் இரத்தினகிரி தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள் இடமிருந்து வலமாக

Sunday 2 January 2011

மகா கும்பாபிசேகம் கண்ட ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர்-1

இந்த ஆலயம் வேலூர் மாவட்டத்தில் வேலுருக்கு அருகில் 15கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திருவிரிஞ்சிபுரம் எனும் நகரத்தில் அருள் பாலிக்கிறார் மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர். இந்த ஆலயம் சுமார் 1300 வருடங்கள் பழமையானது. வேலூருக்கு வந்தால் அல்லது ஸ்ரீ நாராயணி தங்க கோயிலை தரிசிக்க வந்தால் இந்த ஆலயத்தையும் தரிசித்து செல்லுங்கள்.

இந்த ஆலயத்தைப்பற்றிய மேலும் விபரங்கலை இந்த வலைதலத்தை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள்

http://shanthiraju.wordpress.com/2008/06/09/virinchipuram/

நன்றி ராஜு`ஸ் ஓர்டு பிரஸ் தளம்.

கும்பாபிசேகம் நடந்தேறிய நாள்

12-12-2010.

ராஜ கோபுரம்





புது பொலிவுடன் தோற்றமளிக்கும் சிம்மகுளம். இதைப்பற்றிய மேலும் விவரங்களை விரைவில் தருகிறேன்



1008 சிவலிங்கள் ஒன்றாக காட்சி அளிக்கும் 1008லிங்கம்