Thursday 25 June 2009

'மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமைதானம் தவர்உயர்ச்சி தாளாண்மை - தேனின்கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்து போம்'- நல்வழி, 26வது செய்யுள்

இதன் பொருள் 'பசியென்று வந்துவிட்டால் மானம், உயர்குலம், கல்வி, வலிமை, அறிவுடைமை, ஈகை, தவம், உயர்வு, முயற்சி, தேனின் கசிவு போன்ற சொல்லுடைய நற்குலப் பெண்களைத் காதலித்தல் போன்ற பத்து பண்புகளையும் பறந்து போகச் செய்து விடும்' என்பதே ஆகும்.
உட்கார்ந்த நவக்கிரகங்கள்

மதுரைக்கு அருகில் உள்ளது நத்தம் கைலாசநாதர் கோவில். இங்குள்ள நவக்கிரகங் கள் அனைத்தும் உட்கார்ந்த நிலையில் உள்ளன. இதுமாதிரி வேறுஎங்கும் இல்லை!


`ரிஷபாரூடர்!'

மதுரைக்கு அருகில் உள்ள விராதனூரில் சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு சிவபெருமான் `ரிஷபாரூடர்' வடிவத்தில் அருள்பாலிக்கிறார். இந்த உருவத்தில் வேறு எங்கும் சிவன் காட்சியளிப்பதில்லை.

தகவல்கள் அனைவரின் நலனை விரும்பி தேடி பதித்தது.

நன்றி

குரு என்பவர் யார்?

தத்துவத்தை அறிந்து, சீடனின் நன்மையிலேயே எப்போதும் நாட்டம் கொண்டவரே குரு ஆவார். எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் இருப்பவரே உண்மையான குரு

உங்களின் கருத்தையும் சொல்லலாம்

சிவமயம்

முழுக்க முழுக்க சிவனைப்பற்றியும் சிவாலயங்கள் பற்றியும் சித்தர்களை பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கு வரலாம் இணையலாம் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம். ஏனென்றால் தெய்வ சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் தெய்வத்தில் அருள் பலவாறு பலருக்கும் கிடைத்திருக்கும். இந்த வலைதளத்தில் இணையும் அனைவருமே சிவனின் அருளைப்பெற்றவர்களே.
எனக்கு முழுமையாக தமிழை இணையத்தில் எழுத முடியாது...ஆகவே என்னுடைய எழுத்துப்பிழைகளை பொருத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்உங்களின் ஒரு வாசகன்.