Monday 7 February 2011

பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம்

பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி அமைந்துள்ள இடம்

நாங்கள் இவரின் ஜீவ சமாதியை தரிசித்தது இவரின் கருணையே என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் நாங்கள் மாலை நேரத்தில் ஆலயம் திறக்கும் முன்னரே சென்று விட்டோம்.. சங்கரன்கோயில் ஆலயம் திறக்க நேரமாகும் என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்துகொண்டிருந்த வேலையில் அங்கே பூ விற்பவர்களிடல் கேட்டோம் இங்கு வேறு ஆலயம் உள்ளதா என்று? அவர்கள் மூலம் எங்களுக்கு வழிகாட்டியதே அந்த சங்கரந்தானே என்று என்னும்போது மனம் கொன்ட மகிழ்ச்சிகு எல்லை இல்லை.

சங்கரன் கோயில் ஆலயத்தின் மேற்கு கோபுர வாசல் வழியாக நடந்து சென்றால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இவரின் ஜீவ சமாதி. ஆட்டோவிலும் செல்லலாம்..ஆனால் ஆட்டோகாரரிடம் சித்தர் சமாதி என்று சொல்ல வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆலயத்தின் வாசலில் பூ பழம் விற்பவர்களிடம் வழி கேட்டாலும் சரியாக சொல்வார்கள்.



சங்கரன் கோவிலில் மேற்குக் கோபுர வாசல் அருகே புளியங்குடி செல்லும் சாலையில், பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி பீடம் அமைந்துள்ளது.




சங்கரன் கோயில் ஆலயத்தை அடைந்து சங்கரனாராயனரை தரிசனம் செய்யுங்கள். தரிசனம் முடிந்ததும் ஆலயத்தை விட்டு வெளியே வந்ததும் ஆலயத்தின் பின்புறமாக நடந்து செல்லுங்கள். ஒரு சாலை வரும் அந்த சாலையில் வலது புறமாக வலந்து சுமார் 1 கிலோ மிட்டார் தூரம் நடந்ததும் சாலையை ஒட்டி ஒரு குளம் இருக்கும் அதே இடத்தில் ஒரு தகவல்பலகையும் இருக்கும் அதுதான் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கும் இடம்.




சாலையில் இடது புறமாக அல்லது வலது புறமாக வலைவதில் குழப்பம் இருந்தால் அருகில் இருக்கும் சிலரிடம் விசாரித்து செல்லுங்கள்.

பாம்பாட்டி சித்தரின் தரிசனம் பெருக ஈசன் அருள் அடைக

மருத மலையிலும் அவரது ஜீவ சமாதி இருக்கிறது. சித்தர்கள் பல இடங்களில் ஜீவ சமாதி அடையும் திறன் படைத்தவர்கள்

1 comment:

  1. thanks for sharing ....

    Jeevasamadhis in Coimbatore
    கோவையில் உள்ள ஜீவ சமாதிகள் பற்றி அறிய
    http://spiritualcbe.blogspot.in/

    ReplyDelete