Thursday 16 December 2010

உங்களின் தேடல்தான் என்ன? - 2

உங்களின் தேடல்தான் என்ன?

வாழ்க்கையில் பல கரடு முரடான பாதைகளை சந்தித்து வந்தவன் நான். கடவுளை காண முடியாதா என ஏங்கிக்கொண்டிருக்கும் பல இதயங்களை போல என் இதயமும் காத்து இருக்கிறது என்பது உண்மை. ஆனால் பல வடிவங்களில் பல ஆலயங்களில் மனித வடிவில் அவரின் லீலைகளை கண்டுள்ளேன். கனவுகளில் முதலில் காட்சி அளித்து பின்னர் அதே ஆலயத்தை நேரில் தரிசிக்கும் பலனையும் பெற்றுள்ளேன்.

இதற்காக எனக்கு குரு இருக்கிறார் என்று எண்ண வேண்டாம். அவனையே குருவாக முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் போது அவர் அருள் நிச்சயம் கிடைக்கும்.

உங்களின் உண்மையான தேடல் என்ன என்பதை கண்டறிந்த பின் அந்த கோரிக்கையை அவர் முன் வையுங்கள் கண்டிப்பாக நிறைவேற்றுவார்.

பல வலை தளங்களில் அனவரும் குரு எப்படி கிடைப்பார்? எனக்கு அந்த பாக்கியம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்,

அவன் அருளால் அவந்தாள் வணங்கு, அனைத்தும் அம்சமாக கிடைக்கும்.

அதற்காக உங்களின் நேரத்தை வீணடிக்காதிர்கள் என்பதே என் கருத்து.

இறைவன் யாருக்கு எப்போது அருள்வான் என்பது யாருக்குமே தெரியாது.

அவன் அன்றி ஓரணுவும் அசையாது என்பது போல அவன் செயலும் அவனை அன்றி யாரும் அறியார். இது ஏற்கனவே எழுதப்பட்டதோ எழுதப்படாததோ என்பது எனக்கு தெரியாது ஆனால் இதுதான் நிசப்தமான உண்மை.

அண்ட சராசரங்களும் அகில லோகத்தையும் ஆட்டுவிக்கும் கடவுளுக்கு தெரியாதா நமது தேடல் என்னவென்று தேவை என்னவென்று.



அவனை நாடி
அவன் அருளை தேடி
அவன் பாதம் தொழுவோர்க்கு
அன்பே உருவாக
அவன் காட்சி கிடைக்கும்...........!!!


தேடலின் அடுத்தப்பதிவு மீண்டும் நேரம் வரும்போது தொடருவேன்.

No comments:

Post a Comment