நிண்ட இடைவேளைக்கு பிறகு இதை தொடர்கிறேன். நேரமின்மை மற்றும் வேலை பளு .
சரி இந்த சிவராத்திரியில் உங்கள் தேடல் நல்லவையாக இருக்கட்டும். இப்படி சொல்வதால் எனது செயல் நான் நல்லவனா என்பது எனக்கு தெரியாது., யாரும் காலத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. எல்லாம் அவன் அருளாலே என்று விட்டுவிடுங்கள் . ஆனால் அவனை உறுதியாக பிடித்துகொள்ளுங்கள் அது போதும்.
தேடி தேடி போகும் பொது அது விலகித்தான் செல்லும். அதுவும் இந்த கலிகாலத்தில் மிகவும் கடினம் அவனை அடைவது., அப்படி மீறி அவனை அடைபவர்கள் எப்பேர் பட்டவர்கள் என்று சொல்லித்தெரிவதில்லை.
எப்படி எப்படியோ இறைய தேடுபவர்களில் இப்படியும் அடையலாம் என்று ஒரு குறிக்கோளே இல்லாமல் தேட்டுபவர்களில் நானும் ஒருவன். பக்கத்திலேயே இருப்பான் ஆனால் இருக்கமாட்டான் அவன்தான் இறைவன்,.
ஆனால் எப்போதும் அவன் நம்மை வழி நடத்துவான் என்று உறுதியாக நினைத்து இந்த சிவராத்தியில் முடிந்த வரை கண் விழித்து அவனை போற்றி புகழ்ந்து தொழுது அவன் அருளை அடைய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை சொல்லிகொள்கிறேன்.
சிவமே என்று தொழுவோர்க்கு
அகமே சிவம்
எனும் தத்துவத்தை எளிதில் புரியவைப்பான் அவன்.
அனைவருக்கும் எனது சிவராத்திரி வாழ்த்துகள்
சிவ சிவ
எனும் மந்திரத்தை சிரமேற்கொண்டு இந்த சிவராத்திரியை அழகாக அமைத்திடுங்கள்
அன்புள்ள சிவனருள் ,
ReplyDeleteதங்களின் கருத்து மிகவும் சரியே .
அகமே சிவம்.
அன்பே சிவம்
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.