Tuesday 8 February 2011

போகரின் ஜீவ சமாதி அமைந்துள்ள இடம்

முருகனின் ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தளமாக இன்றும் விளங்கி வருவது பழனி. பழனியில் பழனி ஆண்டவரின் சந்நிதியின் அருகிலேயே போகர் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

பழனி முருகனை தரிசனம் செய்துவிட்டு அவரது பிரகாரத்தை சுற்றி விட்டு வெளியே வரும்போது பிரசாதம் கொடுப்பார்கள். அந்த இடத்திற்கு அருகிலேயே போகரின் ஜீவ சமாதி இடம் அமைந்திருக்கும். பெரும்பாலானவர்களுக்கு இது தெரியாது. சிறிய குகை போல் இருக்கும் அதன் நுழைவாயில். முருகரின் பரம பக்தர் போகர் என்பது குறிபிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அனைவரும் அறிந்த பழனி மஊலவரின் அருகிலேயே இருக்கும் நவ பாசான சிலையை செய்தவரும் இவர்தான்.




போகரின் தரிசனம் பெருக முருகனருள் அடைக.

பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திருவாவினன்குடி ஆகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் அருளி அவரை மகிவிக்கிறார் இந்த குழந்தை வெலாயூதர். இது முற்றிலும் உண்மை.

பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது

No comments:

Post a Comment