Monday 27 September 2010

பதஞ்சலி முனிவரின் பூசை துதி

பதஞ்சலி முனிவரை தியானிக்க பின்வரும் 16 போற்றிகளை தினமும் பாராயணம் செய்ய வேண்டும்.




பதினாறு போற்றிகள்

1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!

2. ஆதிசேஷனின் அவதாரமே போற்றி!

3. ஒளிமயமானவரே போற்றி!

4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!

5. கருணாமூர்த்தியே போற்றி!

6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!

7. பூலோகச் சூரியனே போற்றி!

8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!

9. பேரும் புகழும் உடையவரே போற்றி!

10. இன்மொழி பேசுபவரே போற்றி!

11. இகபர சுகம் தருபவரே போற்றி!

12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!

13. அஷ்டமா சித்திகளையுடையவரே போற்றி!

14. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி!

15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!

16. யோகங்கள் அனைத்தையும் அளிக்கும் பதஞ்சலி சித்த சுவாமியே போற்றி! போற்றி!

இவ்வாறு 16 போற்றிகளைக் கூறி அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான

“ஓம் க்லம் பதஞ்சலி சித்தரே போற்றி!”

என்று 108 முறை ஜெபிக்க வேண்டும்.

நிவேதனமாக இளநீர், கடுக்காய், தண்ணீருடன், தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், பழம் போன்றவற்றை வைக்க வேண்டும். பின் உங்கள் பிரார்த்தனனயை மனமுருக கூறி வேண்டவும். நிறைவாக தீபாராதனை செய்யவும்

No comments:

Post a Comment