Saturday 21 April 2012

இலிங்காஷ்டகம் - ஸ்லோகமும் பொருளும்.

இலிங்காஷ்டகம் 

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம் 
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

 ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்

நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்

 ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம் 
ராவண தர்ப வினாஷன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்

 காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்

 ராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

ஸர்வ  ஸுகந்த ஸுலேபித லிங்கம் 
புத்தி விவர்த்தன காரண லிங்கம் 
சித்த சுராசுர வந்தித லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் - எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம் - உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்

சித்த சுராசுர வந்தித லிங்கம் - சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

 கனக மஹாமணி பூஷித லிங்கம் 
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் 
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

 கனக மஹாமணி பூஷித லிங்கம் - பொன்னாலும் மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம்

பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் - நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

 தக்க்ஷ  ஸுயக்ஞ விநாசன லிங்கம் - தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

குங்கும சந்தன லேபித லிங்கம் 
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் 
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம் - குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப் பட்ட லிங்கம்

பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் - தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம்
 
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் - பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் 
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் 
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

 தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் - தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்

பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் - உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம் - கோடி சூரியன்களின் ஒளியினைத் கொண்டிருக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் 
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் - எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் - எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் - எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் 
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் 
பராத்பரம் பரமாத்மக லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் - தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம்.

ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் - தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.

பராத்பரம் பரமாத்மக லிங்கம் - பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம். தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

லிங்காஷ்டகம் இதம் புண்யம் யே படேத் சிவ சன்னிதௌ சிவலோகம் அவாப்நோதி சிவே ந ஸஹமோததே. லிங்காஷ்டகம் இதம் புண்யம் - இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது யே படேத் சிவ சன்னிதௌ - இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால் சிவலோகம் அவாப்நோதி - சிவலோகம் கிடைக்கும் சிவே ந ஸஹமோததே - சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.  

நன்றி ஸ்தோத்ரமாலா.

இதிலே கடைசி பதிகமான,

 லிங்காஷ்டகம் இதம் புண்யம் யே படேத் சிவ சன்னிதௌ சிவலோகம் அவாப்நோதி சிவே ந ஸஹமோததே

சொல்வதை தவிர்க்கவும். இது லிங்கச்டகத்தின் பலனை சொல்லவே ஆகவே ஆலயங்களிலும் சரி பூஜை அறையிலும் சரி இதை சொல்வதை தவிர்த்து மற்ற எட்டு பதிகங்களை மட்டும் துதித்து அவன் அருளால் அவன் அருள் பெறுக. அன்புடன் சிவனருள் பதிவன்

2 comments:

  1. திருவாசத்தின் சிவபுராணத்தின் இறுதியில் "சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்வர் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப்பணிந்து" என்று சிவபுராணம் படிப்பதன் பலன் சொல்லப்பட்டுத்தான் உள்ளது. தேவாரப்பதிகங்களிலும் பதினொராவது பாடல் அமைக்கப்பட்டு அதில் அப்பதிகம் பாடுவதால் வரும் பயன் சொல்லப்பட்டுத்தான் இருக்கின்றது. ஆக; சிவபுராணத்தின் கடைசிவரிகளை படிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது எவ்வளவு தவறோ, அதுபோல் இலிங்காஷ்டகத்தின் கடைசிவரிகளைப்படித்தலை தவிர்க்க வேண்டும் என்ற கருத்தும் தவறென்று கருதுகின்றேன்.

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள். எல்லாம் திருவருட் சம்மதம்

    ReplyDelete
  2. பஞ்சாட்சர மந்திரம் - 5 பதிகம் (பஞ்சம் என்றால் 5)
    கணேச பஞ்சரத்னம் - 5 பதிகம்
    சிவாஸ்டகம் - 8 பதிகம்
    லிங்காஸ்டகம் - 8 பதிகம் (அஷ்டம் என்றால் 8)

    இது போல பல சொல்லலாம்.. அந்த குறிப்பிட்ட பதிகங்களை சொல்வதுதானே சரியானது என்பது என் கருத்து.

    அத்னால்தானே பதிகத்திலே அது எத்தனை என்பதை குறித்துள்ளார்கள்.

    எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் தவறாக எண்ண வேண்டாம்.

    உங்கலுக்கு அப்படி சொல்வதில் மனகுழப்பம் இல்லை என்றால் தாங்கள் அப்படியே சொல்லலாம்.

    -----------------------------------------
    இந்த மந்திரத்தை சொல்வதனால் ஏற்படும் பலன்கலைத்தான் அந்த கடைசி பதிகத்தில் சொல்கிறார்கள்.

    அது ஏன் என்று நான் சிந்தித்த போது,
    மந்திரத்தை சொல்லிவிட்டோம் ஆனால் அதன் பலன் என்னவென்று தெரியவே அந்த பதிகம் எழுதி இருக்கிறார்கள் என்பது என் கருத்து.

    இல்லை என்றால் இதனால் என்ன பயன் என்று கேட்போருக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு பலனை சொன்னால் அது சரியாகாது என்றே, அந்த பாடலை எழுதியவரே அதன் மகிமையையும் சொல்லிவிட்டால் அங்கு கேட்பதற்கு ஒன்றுமில்லை.

    அன்புடன்
    சிவனருள் பதிவன்

    ReplyDelete