Saturday 17 July 2010

என்னை மாற்றும் இந்த பதிவுகள்


மகான்களாக சிலர் மற்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளப் படுகின்றார்கள். அறிவுத்திறனும், அன்பும் நிறைந்தவர்கள் கிடைப்பது சற்று கடினம் என வரலாறு சொல்லுகிறது. நம்முடைய காலக் கட்டத்திலேயே வாழ்ந்து மரித்தவர் வேதாத்திரி. மகரிசி வாழ்க்கையில் நடந்த 100 சுவையான சம்பவங்களை படிக்க நேர்ந்தது. அதல் பகிர வேண்டும் என்று தோன்றியதை இங்கு பதிக்கிறேன்

“ஒருநாள் ஒரு நண்பர் மகரிசி ரேஸ்க்கு போவது நல்லதா கெட்டதா?” என்றார்.

“அதனால் உங்களுக்கு லாபமா நஷ்டமா?” என எதிர்கேள்வி கேட்டார் மகரிசி.

“முதலில் லாபம் வருவதாக தோன்றுகிறது. ஆனால் கூட்டிகழித்துப் பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது இது அனுபவத்தால் அறிந்து கொண்டேன்.”

“நீங்கள் கேட்ட கேள்விக்கு உங்களிடமே விடையிருக்கிறதே!.பின் ஏன் என்னிடம் கேட்கின்றீர்கள். விட்டுவிட வேண்டியதுதானே. “

“நானும் போகக் கூடாது என நினைக்கிறேன். ஆனால் முடியவில்லை.”

“உங்கள் தந்தைக்கும் இந்த பழக்கம் இருந்ததா?”

“ஆம், சுவாமி. அவருக்கும் இந்த ரேஸ் பழக்கம் இருந்தது. பெரும்பாலான சொத்துகளை அதில் அழித்துவிட்டார்.”

“உங்கள் தந்தையாரின் எண்ணப் பதிவுகள் கருவமைப்பின் மூலமாக உங்களுக்கும் வந்திருக்கின்றன. அதனால் தவறென அறிவு உணர்த்தியும் மீண்டும், மீண்டும் அதையே செய்துவருகின்றீர்கள்

நீங்கள் நல்லவிதமாக தியானம் செய்து உங்கள் எண்ண ஆற்றலை வலுப்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கு நான் உதவிசெய்கிறேன்.”

இனி நான் அங்கு செல்லமாட்டேன். அது போன்ற சூழ்நிலையை ஏற்படுத்திக்கொள்ளமாட்டேன்.வாழ்க்கையில் துன்பம் சேர்ப்பது எனக்கு வேண்டாம் என்று தொடர்ந்து சங்கல்பம் செய்து வாருங்கள். எண்ண ஆற்றல் வழுப்பெற்றவுடன் இந்த தவறை விட்டுவிடுவீர்கள். என்று கூறினார்.

ஆனால் எண்ண ஆற்றல் வழுப்பெரும் வரை ரேஸ்க்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என எண்ணிய வேதாத்திரி “குருதட்சனையாக என்ன கொடுப்பீர்கள்?” என கேட்டார்.
“இந்த பழக்கத்தை விட உதவி புரியும் உங்களுக்கு உயிரையும் தருவேன்” என்றார் அந்த நண்பர்.

உடனே மகரிசி “அதெல்லாம் வேண்டாம். உங்கள் எண்ணங்களில் இருக்கும் ரேஸூக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் என்னிடம் தந்துவிடுங்கள்.” என்றார்.

அவ்வாறே வாக்குக் கொடுத்த நண்பர். அதன் பிறகு ரேஸ் பக்கமே போக வில்லை.

மகான்கள் இறைவன் அனுப்பிய தூதுவர்கள். தர்மத்தினை எடுத்துரைத்து எல்லோரும் பின்பற்ற வழிவகை செய்பவர்கள். அதைதான் மகரிசியும் செய்துள்ளார்

2 comments:

  1. whats your drive for creating this blog?

    ReplyDelete
  2. நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

    ReplyDelete