Sunday, 20 November 2011

உஜ்ஜையினி மாகாளி (கட் காளிகா)

உஜ்ஜையினி மாகாளி (கட் காளிகா)

Saturday, 29 October 2011

ஸ்ரீ முருகன் மூல மந்திரம்

எல்லாரும் கந்த குரு கவசம் கேட்டு இருப்பிர்கள் மிண்டும் ஒரு முறை கேளுங்கள் ஏனென்றால் நானும் பல முறை கேட்டிருந்தாலும் அந்த கந்த குரு கவசத்தின் நோக்கமே கந்தனின் மூல மந்திரத்தை சொல்வதுதான் என்பது சில தினகளுக்கு முன்புதான் தெரிந்தது.

இதோ உங்களுக்காக



முருகன் மூல மந்திரம்:
ஓம் சௌம் சரவணபவ
ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ.




என்று ஓதி முருகனருள் பெருக.
மேலும் இம்மந்திரத்தின் பெருமையை அறிய பொறுமையாக கந்த குரு கவசத்தை கேளுங்கள்


அன்புடன்
சிவனருள் பதிவன்

Friday, 8 July 2011

இடைக்காட்டு சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம்.

இடைக்காட்டு சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடம்.



இவரின் ஜீவ சமாதி திருவண்ணாமலையில் உள்ளது என்றுதான் பல இணையதளங்களில் படித்திருந்தேன். அன்றுமுதல் குறிப்பாக அவரின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தேடிகொண்டிருந்தேன் தெரிந்தவரிகளிடமும் கேட்டேன் அப்போது தெரியவில்லை. ஆனால் அவரின் ஜீவ சமாதியை கண்டபின் அடடா அண்ணாமலையாரின் அதிசயம்தான் என்ன என்று வியந்தேன். ஆமாம் விடை தேடி அலைபவர்களுக்கு கண்டிப்பாக விடை கிடைக்கும் என்று என் பல தலைப்புகளில் சொல்லி இருப்பேன் அது போல் எனக்கும் விடை கிடைத்தது.

பட்டினத்தாரின் சிவ சமாதியை தரிசித்ததும் அடுத்து நான் சென்ற ஆலயம் திருவண்ணாமலைதான் அவரின் அருளால் அவரின் தரிசனத்தை ஆனந்தமாக கண்டேன். அம்மனையும் தரிசித்துவிட்டு அனைவரும் அமர்ந்து பேசிகொண்டிருந்தோம் அம்மன் சந்நிதானம் அருகில் உள்ள நவரகிரங்கங்க்களை வலம் வந்து முடிந்தவுடன்.

அப்போது நான் திடிரென்று என்னுடன் அமர்ந்து பேசிகொன்டிருந்தவரிடம் கேள்வி கேட்டேன். அயா இங்கே இடைகாட்டு சித்தரின் ஜீவ சமாதி உள்ளதாமே அது எங்கே என்று. எப்படி இந்த கேள்வி அப்போது கேட்டேன் என்று இன்றும் யூசித்துகொன்டுதான் உள்ளேன்.

அவர் அடடா உனக்கு தெரியாதா, எனக்கும் தெரியாமல்தான் இருந்தது. பல நாட்களாக எனக்கும் இந்த ஐயம் உண்டு, அதை எனக்கு நீகியவரே நான் கொஞ்ச நீரம் முன் உனக்கு காண்பித்த அந்த சாமியார்தான் என்று சொன்னார்.

அப்புறம் இடைக்காடு சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடத்திற்கு ஒரு நிமிடத்தில் அழைத்து சென்றார் என்றால் அது மிகையாகாது.

ஆமாம், அண்ணாமலையாரை தரிசித்து விட்டு அவரின் பிரகாரத்தை சுற்றிவிட்டு வெளியே வந்து அவரின் அடுத்த பிரகாரத்தை சுற்றி வரும்போது சரியாக அண்ணாமலையாரின் சன்னதி உள்ளத்துக்கு பின்புறம் அருணை யோகிஸ்வரர் மண்டபம் என்று இருக்கும். அது மண்டபம் அல்ல அதுதான் அதுதான் இடைக்காட்டு சித்தரின் ஜீவ சமாதி. அந்த மண்டபத்துக்கு கீழே விளக்கு எரியும் அங்கு பார்த்திர்களானால் இடைக்கட்டு சித்தரின் உருவம் சிலையாக வடிக்கப்பட்டிருக்கும்

எத்தனைமுறை அந்த பக்கம் வலம் வந்து இருந்தாலும் நான் தேடிக்கொண்டிருந்த அந்த மகானின் ஜீவ சமாதி அங்கு இருப்பதை கண்டவுடன் மெய் சிலிர்த்தேன். இதில் பல அர்த்தங்கள் எனக்கு புரிந்தது.

எல்லாம் சிவன் லீலை.

Monday, 27 June 2011

பட்டினத்தாரின் ஜீவ சமாதி உள்ள இடம்

பட்டினத்தாரின் ஜீவ சமாதி உள்ள இடம்



திருவொற்றியூர் பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆதிபுரிஸ்வரர் உடனுறை வடிவுடை அம்மன் ஆலயத்தை முதலில் தரிசனம் செய்யுங்கள். அந்த கோயிலுக்கு தியாகராஜா ஆலயம் என்று கூறுகின்றனர். அந்த அலாயத்தில் இருந்து சுமார் பத்து நிமிடம் நடை பயணமாக சென்று பட்டினத்தாரின் ஜீவ சமாதியை அடையலாம். அங்கே யாரிடமும் கேட்டு தெரிந்துகொள்ளலாம். படினத்தார் சமாதி என்று கேட்டால் தான் சரியான வழியை சொல்கிறார்கள். சித்தர் சமாதி என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஆகவே பட்டனத்தாரின் ஜீவ சமாதி உள்ள இடம் என்று கேட்டால் அவரின் சிவ சமாதியை எளிதில் அடையலாம். அங்கிருந்து ஆட்டோக்களும் செல்கிறது. ஆட்டோவில் சென்றால் ஐந்து நிமிடம் ஆகும்.

உண்மையிலேயே அவரின் ஜீவ சமாதி உள்ள இடத்தில் அவரின் ஜீவன் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது. அவரின் ஜீவ சமாதி தரிசனம் உண்மையிலேயே நிதர்சனம்

காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே

அடுத்து இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி உள்ள இடத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி
சிவனருள் பதிவன்

Monday, 6 June 2011

அட்சய திரிதியை அன்று தங்கம் தான் வாங்க வேண்டுமா?

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று மக்கள் சொல்லலாம். ஆனால், இறை அடியார்களாகிய நீங்கள் என்ன சொல்கிறீர்கள். ஆதியில் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த அற்புதமான வேத வாக்கியங்கள், பழமொழிகள் எல்லாம் தற்காலத்தில் அனர்த்தம் ஆகி விட்டதற்கு அட்சய திரிதியையும் ஒன்று.

அட்சய திரிதியை என்றால் என்ன?

ஆதிகாலத்தில் பிரம்ம தேவருக்கு ஐந்து தலைகள் இருந்தன. ஒரு முறை பிரம்ம மூர்த்தி தானே படைப்புக் கடவுள், தன்னை மிஞ்சிய தெய்வம் உலகில் எவரும் இல்லை என்று செருக்குக் கொண்டபோது சிவபெருமாள் பிரமனுடைய ஐந்தாவது தலையைக் கிள்ளி பிரம்மனுடைய அகங்காரத்தைச் சம்ஹாரம் செய்தார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தின் விளைவாக பிரம்மாவினுடைய கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது. இந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறுவதற்காக பிரபஞ்சம் எங்கும் அலைந்து திரிந்து பிட்சை ஏற்று, இறுதியில் காசி அன்னபூரணி தேவியிடம் பிச்சை ஏற்றபோது சிவபெருமானுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கி பிரம்ம கபாலம் அவர் கையிலிருந்து மறைந்தது. அன்னை பராசக்தியிடம் சிவபெருமாள் பிச்சை ஏற்ற தினமே அட்சய திரிதியை ஆகும்.

சிவபெருமானே அன்னபூரணி தேவியிடம் பிச்சை ஏற்கிறார் என்றால் அட்சய திரிதியை அன்று நாம் செய்ய வேண்டியது அன்னதானம் என்பது ஒரு சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளும் அல்லவா? ஆறறிவு பெற்ற மக்கள் இந்தச் சிறு விஷயத்தைக் கூட எப்படித் தலைகீழாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பது வியப்புக்குரியதே. திதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு. இதில் திரிதியை திதி எதையும் பெருக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. எது பெருக வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

நன்றி சில இணையதளம் தொகுப்பு.

Sunday, 1 May 2011

காசி மாநகரம் விஸ்வநாதரின் தரிசனம்

காசி மாநகரம் விஸ்வநாதரின் தரிசனம்

பல திரைப்படங்களிலும் பல செயிதிதாளகளிலும் சொல்லும் அளவிற்கு காசி நகரம் ஒன்றும் பயங்கரமான நகரம் அல்ல. மிகவும் சாந்தமான நகரம் எனக்கு எந்த வித குறையும் இல்லாமல் குறையும் இல்லாம நிறைந்த தரிசனம் தந்து எனக்கு பிரிய விடை தந்து அனுப்பினர் காசி விழ்வனாதர். இரண்டுன் நாட்கள் ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த நினைவை ஏற்படுத்தியது காசி நாதரின் அருள் கடாட்சம்.

கங்கை நதி பூஜை அருமை ஆனந்தம் ஒரு புறம் அரிச்ச்சன்ற மாயானம் மறுபுறம் சிவனின் மயானம் இரண்டுக்கும் நடுவில் கங்கையின் ஆரத்தி அதாவது கங்கையின் தீபராதை தினமும் மாலை 7 மணிக்கு



மிகசிறந்த பயணமாக இதை உணர்கிறேன். கண்டிப்பாக மிண்டும் தரிசிப்பேன்,




எல்லாருக்கும் ஒரு குறிக்கோள் இருந்தாலும் எனக்கு இவரை மிண்டும் தரிச்சிப்பேன். என்ற எண்ணம் காசியை விட்டு பயனிக்கும்பூது தோன்றியது. அதுவும் அவனின் சித்தமே

எத்தனை சித்தர்கள் எத்தனை மகான்கள் வந்த இடம், ...........காசி மீண்டும் தொடர்வேன்

Sunday, 27 March 2011

ஓம் நமசிவாய - யாரெல்லாம் கூறலாம்?

ஓம் நமசிவாய - யாரெல்லாம் கூறலாம்?

நல்ல மனமும் நல்ல குணமும் உள்ள யாரும் நம சிவாய மந்திரத்தை கூறலாம். இதற்கு எந்த வித கட்டுப்பாடும் கிடையாது.

தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு ஒரு 5 நிமிடம் அவன் முன் அமர்ந்து தூய நினைவோடு தூய அன்போடு அவன் முன் அவன் நாமத்தை சொன்னால் அவன் மனமும் உருகும் அவன் அருளும் கிடைக்கும்.

ஓம் நமசிவாய
சிவ நமசிவாய
சிவாய நம சிவ
சிவ சிவ நம சிவ
சிவாய நம சிவாய
.

அதன் பிறகு நீங்கள் இயல்பாக உங்கள் பணிகளை தொடரலாம்.

அனைத்தும் ஜயமே அனைத்தும் இன்பமே

சிவாய நம என சொல்வோர்க்கு அபாயம் ஒருபோதுமில்லை.

ஓம் நம சிவாய





திருச்சிற்றம்பலம்

இது முழுக்க முழுக்க என்னுடைய கருத்து.